இன்று கூடும் வேதன நிர்ணய சபை!

0
6

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன நிர்ணயத்துக்காக இன்றைய தினம் வேதன நிர்ணய சபை மீண்டும் கூடவுள்ளது. இதன்போது 1,700 ரூபாய் நாளாந்த வேதனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை எடுக்கவிருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தற்போது ஜனாதிபதியே தொழில் அமைச்சராகவும் இருக்கின்ற நிலையில், இது சார்ந்த அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏலவே 1,700 ரூபாய் நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியிலிருந்த குறைபாடுகள் நிவர்த்திச் செய்யப்பட்டு, புதிய யோசனை இன்று முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here