கிராம உத்தியோகத்தர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு மற்றும் கறுப்பு வாரம் தொடரவுள்ளதாகக் கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கை தொடர்பில் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவுடன் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டது.
அந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தங்களது பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்றைய தினமும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராம உத்தியோகத்தர்கள் நேற்றைய தினமும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் காரணமாகச் சேவையைப் பெற்றுக்கொள்ளப் பிரவேசித்த பல பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.