தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.