அஸ்வெசும நலன்புரி உதவித்திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையோரை தேர்ந்தெடுக்கும் பணிகள், இந்த மாத இறுதிக்குள் நிறைவடையுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி உதவித்திட்டத்தின் 2ஆம் கட்டத்துக்காக 4 இலட்சத்து 50,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில், தகுதியுடைய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசுமவின் முதல் கட்டத்துக்காக 18 இலட்சத்து 54,000 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
அவர்களுக்காக 58.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.