அத்துகலயில் இருந்து கீழே விழுந்த நபர் காயம்!

0
3

குருநாகல், அத்துகலயில் இருந்து கீழே விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (19) காலை 119 தகவல் மத்திய நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காயமடைந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here