இஸ்ரேல் -ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில் காசாவின் தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை காசாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.