தென் மாகாணத்தில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு 200 ஸ்மார்ட் வகுப்பறைகளும் 2 ஆயிரம் டெப் (TAB) கணினிகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு இன்றைய தினம் காலியில் இடம்பெற்றுள்ளது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியாவின் ஒத்துழைப்புடன் 300 மில்லியன் ரூபாய் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.