கொழும்பில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 17வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாகத் தெரிய வருகிறது.
கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.