திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகத் தொடர்ந்து முன்னிருந்த ஆர். சம்பந்தனின் திடீர் மரணம் தொடர்பில் தனது கவலையைத் தெரிவிப்பதாக எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பந்தனின் மரணம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என்றும், அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசிய தலைவராகச் செயற்பட்டதாகவும், தேசியத்துவம் தொடர்பில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன, சமய, குல பேதமின்றிச் சகலரையும் ஒரேமாதிரியாக மதித்துப் பழகிய தலைவர் என்றும் எதிர் கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததார்.