பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது!

0
7

ஐக்கியத் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம் தூண் மீ ஓயாவிற்கு அருகிலுள்ள அலிமங்கட பிரதேசத்தில் அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here