முக்கியப் போர் ஆயுதங்களை வடகொரியா வெற்றிகரமாகச் சோதனை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட கொரிய அரச ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் வடகொரியா சோதனையில் தோல்வியடைந்துள்ளதாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது.
இது சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடு எனவும் வடகொரியா மிகைப்படுத்திக் கருத்துக்களை வெளியிடுவதாகவும் தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.
வடகொரியாவின் சோதனை நடவடிக்கைகள் வெற்றியளிக்குமாயின் அது சர்வதேசத் தடைகளுக்கு மத்தியில் ஆயுத மேம்பாட்டை முன்னோக்கிக் கொண்டு சென்றுள்ளமையைக் குறிக்கும்.
அதேநேரம் வடகொரியா நீண்ட தூரம் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளையும் பல போர்க்கப்பல்களையும் சோதனை நடத்துவதாகச் சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் சர்வதேசத் தடைகள் காரணமாக வடகொரியாவினால் முன்னோக்கிச் செல்ல முடியாது எனத் தென்கொரியா தெரிவித்துள்ளது.