யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவமானது நேற்று (27) வடமராட்சி கிழக்கு – ஆழியவளை, கொடுக்குளாயில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே இவ்வாறு பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.