நுவரெலியாவில் அதிகப் பனிமூட்டம் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
4

சீரற்ற வானிலையினைத் தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (24) காலை முதல் அதிகப் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி , வெண்டிகோனர் , பங்களாஹத்த , நானுஓயா , ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது இதனால் சாரதிகள் வாகனங்களைச் செலுத்துவதில் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன.

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது . மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் அதிகக் குளிருடன் கூடிய காலநிலை காணப்படுவதை உணர முடிகின்றது .

குறிப்பாகப் பிரதான வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாகத் தங்களது வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களைச் செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here