கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும், அதற்கான உரிய தீர்வு கோரியும், தொடர்ச்சியாக 92 நாட்களாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில், அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.