O/L பெறுபேறு தொடர்பாக ஆணையாளர் விளக்கம்!

0
5

2023ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தரத் தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களில் வெளியாகுமெனப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. எனினும் தாம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவ்வாறு தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாகத் தெளிவுபடுத்தி அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here