யேமனுக்கு அப்பால் செங்கடலில், ஹவுத்தியின் 4 கடல் கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 விமானங்களை அமெரிக்க இராணுவம் அழித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹவுத்திகள் கடந்த நவம்பர் மாதம் முதல் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தி வந்தனர். காசாவை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஹமாஸுக்கு ஆதரவாகவே அந்தத் தாக்குதல்களை ஹவுத்திகள் நடத்துகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்தவே அமெரிக்கா ஹவுத்திகள் மீது இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.