நாளை (21) பொசன் போய தினம் என்பதால், சிறைக்கைதிகளுக்குத் திறந்த வெளியில் வருபவர்களைச் சந்திக்கச் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், கைதிகளைப் பார்வையிடுவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதன்படி, கைதிகளின் உறவினர்களால் நாளை ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்க வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.