சுப்பர் – 8 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா!

0
10

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 25ஆவது போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் இந்தியா மூன்றாவது அணியாகச் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

அமெரிக்க அணிக்கெதிரான நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here