அமெரிக்காவின் ஓகையோவில் வெடிப்பு சம்பவம்!

0
7

அமெரிக்காவின் ஓகையோவின் யங்டவுனில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர்காயமடைந்துள்ளனர் இருவர் காணாமல்போயுள்ளனர். ஓகையோ மத்திய சதுக்கத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த பகுதிக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கிகள் தொடர்மாடிகள் காணப்பட்ட கட்டிடத்திலேயே வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.வாயு கசிவு ஏற்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும இது வெடிப்புசம்பவம் என உறுதியாகத் தெரிவிக்க முடியும் என யங்டவுனின் தீயணைப்புபிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த ஏழு பேருக்குச் சிகிச்சை அளிக்கின்றோம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண் ஒருவரையும் பெண்ணையும் காணவில்லை ஆண் வங்கி ஊழியர் எனத் தீயணைப்பு படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here