மோட்டார் சைக்கிள்களைத் திருடி உடனடியாக உதிரிபாகங்களாகப் பிரித்து விற்பனை செய்தும் விடுகின்றார்கள், எனவே உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் . யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்துள்ளதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோட்டார் சைக்கிள்களைப் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, அவற்றுக்கு ஹாண்டில் லொக் போட்டு செல்லுமாறும், மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.