கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி நாளை மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாகக் குறித்த பகுதி மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மறுதினம் 2 மணித்தியாலங்களுக்குக் குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.