இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த சதி!

0
8

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்குத் தயாராகி இருந்தமையை அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த நால்வரும் இலங்கையில் வசித்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கொழும்பில் வசித்ததாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

சந்தேக நபர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய 3 துப்பாக்கிகள் மற்றும் 20 குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here