ஐதேகவில் இருந்து விலகினார் ஆனந்தகுமார்!

0
3

ஐக்கியத் தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்இ கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அவர் கடிதம்மூலம் தெரியப்படுத்தவுள்ளார்.

இது தொடர்பில் சுப்பையா ஆனந்தகுமார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் “2020 பொதுத்தேர்தலில் ஐக்கியத் தேசிய கட்சி தோல்வியடைந்த பின்னர்க் கட்சியை விட்டு பலரும் வெளியேறிய நிலையில் கட்சியின் வளர்ச்சிக்காகக் கடினமான காலகட்டத்திலும் களத்தில் இறங்கி செயற்பட்டிருந்தோம்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் எவ்வித கொடுப்பனவுமின்றிப் பணிகளை முன்னெடுத்து வந்தோம்.

அரச வாகனங்களைக்கூடப் பயன்படுத்தியது கிடையாது. அரச வளங்களையும் பெற்றது கிடையாது. எனினும்இ கட்சியில் உள்ள ஒரு சிலரின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.

இதனால் ஐக்கியத் தேசிய கட்சி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இனியும் ஐக்கியத் தேசிய கட்சியுடன் அரசியல் பயணத்தைத் தொடரப்போவதில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here