இந்திய பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு நேற்று அவசரமாகக் கூடியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் நிலை தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அவசர கூட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்தார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நிலை காரணமாகப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் விநியோகம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.