உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி அவர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதன் பின்னர் இந்திய அமைச்சர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.