தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனரான டில்லி பாபு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
தயாரிப்பாளர் டில்லி பாபு மரகத நாணயம், ராட்சசன், பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன் மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.
இதில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சுலர்’ ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான டில்லி பாபு உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் திடீர் மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவிற்கு இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.