இலங்கைக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எட்டமுடியாது போயுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 இலட்சத்து 2,907 வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், கடந்த மாத இறுதியில் குறித்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 609 சுற்றுலாப் பயணிகளே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.