322 இந்திய மீனவர்கள் கைது!

0
5

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 322 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அவர்களின் 44 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறும், கைதான மீனவர்களை விடுவிக்குமாறும் கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

அத்துடன் இந்திய மத்திய அரசு, இதற்கான உரிய தீர்வை எட்ட வேண்டும் எனத் தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here