இந்தியா – வேதாரண்யம் பகுதியில் வைத்து ஐந்து மீனவர்கள் மீது இனம் தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடற்பரப்பில் வைத்து அவர்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் பின்னர் மீனவர்களின் படகிலிருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகளும் இனந்தெரியாதவர்களால் எடுத்துச் செய்யப்பட்டுள்ளன.