யுக்திய ; 854 பேர் கைது!

0
5

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 854 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 835 ஆண்களும் 19 பெண்களும் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 44 பேர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 141 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 262 கிராம் 554 மில்லிகிராம் ஹெரோயின், 1,430 கிராம் 71 மில்லிகிராம் ஐஸ், 5,380 கிராம் 494 மில்லிகிராம் கஞ்சா, 15,677 கஞ்சா செடிகள் மற்றும் 634 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here