சிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், சிம்பாப்வே அரசாங்கம் யானைகளைக் கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மாத்திரம் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளைக் கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தென் ஆப்பிரிக்க தேசங்களில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 700 வன உயிரினங்களைக் கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.