வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி 21 பேர் பலி!

0
6

நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பலத்த மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நேற்று(04) மாலை வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 13 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வௌியாகிய அறிக்கையின் பிரகாரம், வௌ்ள அனர்த்தங்களில் சிக்கி 53,289 குடும்பங்களைச் சேர்ந்த 202,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here