வெள்ள நீர் வடிந்ததால் தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு நோய்கள் உள்ளால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு சங்க உறுப்பினர் சந்துன் ரத்னாயக் கேட்டுக்கொண்டார்.
கடுமழையால் 40,758 குடும்பங்களைச் சேர்ந்த 159,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளதும், 2 பேர் காயமடைந்துள்ளனர். 2,433 குடும்பங்கள் 80 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.