கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வந்த ஜேர்மன் பல்கலைக்கழக விரிவுரையாளரிடம் சுமார் 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மாளிகாவத்தைக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50,000 ரூபாய், வெளிநாட்டு நாணயத்தில் 1,500 யூரோக்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி மைதானத்தில் உள்ள கடை அருகே இருந்த ஜேர்மன் விரிவுரையாளரின் இடுப்புப் பையிலிருந்த பணம் மற்றும் தொலைபேசி கொள்ளையிடப்பட்டதாகக் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.