உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் இடம்பெற்ற Nacional மற்றும் Sao Paulo அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், உருகுவே அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ (Juan Izquierdo) மைதானத்திலேயே சரிந்து விழுந்தார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், 5 நாட்களுக்குப் பின்னர்ச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து உருகுவே கால்பந்தாட்ட அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இஸ்கியர்டோவின் மரணம் எங்கள் இதயங்களில் ஆழமான வலி மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஈடுசெய்ய முடியாத இழப்பையடுத்து அனைத்து Nacional அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.