மா ஓயாவில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

0
3

நால்ல, கிலம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (12) பிற்பகல் மா ஓயாவை கடக்க முயன்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 35 வயதுடைய நால்ல, திபவுல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் உயிரிழந்தவர் மற்றுமொரு நபருடன் மா ஓயாவை கடக்க முற்பட்ட வேளையில் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here