மகிழுந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

0
11

முல்லைத்தீவு – துணுக்காய் பகுதியில் நேற்றைய தினம் (09) மகிழுந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

கொல்லவிளாங்குளம் – வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சின்னத்துரை வஸ்கரன் என்பவரே விபத்தில் உயிரிழந்தார்.

மகிழுந்தின் டயர் வெடித்ததால், சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு மகிழுந்து விலகியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மகிழுந்தில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here