மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதுரு ஒயா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (23) வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.