நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி களுகங்கை, மாகுரு கங்கை, ஜின் கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றன.
அத்துடன் குடா கங்கையில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.