பெண்ணை உயிருடன் விழுங்கிய அனகோண்டா!

0
7

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 45 வயது பெண்ணை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கலேம்பாங் கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார் ஃபரிதா எனும் இந்தப் பெண் தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இப்படி இருக்கையில் கடந்த 6ம் தேதி அவரைக் காணவில்லை. எனவே அவரது கணவரும், கிராமத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஒரு நாள் முழுவதும் எங்குத் தேடியும் மனைவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தேடுதல் முயற்சியைக் கைவிடாத கணவர், கிராம மக்களின் உதவியுடன் காட்டுக்குள் தேடியிருக்கிறார். அங்கு அவரது மனைவி பயன்படுத்தும் விவசாயக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உடனே அந்தப் பகுதியில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போதுதான் அங்கு 16 மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்துக் கிடந்தது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பாம்பின் உடலை கிழித்துப் பார்க்கையில் ஃபரிதாவின் உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்தோனேசியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here