கல்வி சாரா ஊழியர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சுகயீன விடுமுறையை அறிவித்துத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகக் கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.