பஸ் விபத்தில் 19 பேர் காயம்!

0
3

அநுராதபுரம், பாதெனிய பிரதான வீதியில் ஸ்ரவஸ்திபுர சந்திக்கு அருகில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பஸ்ஸொன்றும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸின் பின்புறம் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here