பலூன்களில் குப்பைகளை அனுப்பிய வடகொரியா!

0
13

தென் கொரியாவுக்குப் பலூன்களில் குப்பைகளை வட கொரியா அனுப்பியுள்ளதாகத் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் செவ்வாய்க்கிழமை (28) இரவு முதல் புதன்கிழமை (29) காலை வரை 150 க்கும் அதிகமான பலூன்கள் குப்பைகளைச் சுமந்தவாறு வட கொரியாவில் இருந்து வருந்ததை அவதானித்ததாகத் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் செயல் வட கொரியா அதன் தெற்கு அயல் நாடுகளுடன் மோதுவதற்கு ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு இராட்சத பலூன்கள் மற்றும் சிறிய பலூன்கள் சுமந்து வந்த பொதியில் இருந்த பிளாஸ்டிக் துண்டுகள், காகிதத் தாள்கள் அடங்கிக் குப்பை வீதியில் நடைபாதையில் கிடக்கும் புகைப்படங்களைத் தென் கொரிய இராணுவம் வெளியிட்டுள்ளது. 

தென்கொரியாவிற்குள் இதுவரை பலூன்கள் குப்பைகளைச் சுமந்து வந்த நிலையில் அரசாங்க நிறுவனங்களால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளைக்கு இராணுவம் ஒத்துழைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here