வைரஸ் தொற்றால் பன்றிகள் இறப்பதால், பன்றி இறைச்சியைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனாலும், பன்றி இறைச்சி உண்ண மக்கள் அச்சப்பட வேண்டாம் என சங்கத் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறித் தெரிவித்துள்ளார். மேலும், பன்றி பண்ணைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.