T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (19) காலை இலங்கை வந்தடைந்தது. அங்கு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த T20 இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க, வீரர்கள் சரியாக விளையாடாததால் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அணித் தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் இதற்காகத் தான் வருந்துவதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.