நுவரெலியாவில் அதிகப் பனிமூட்டம் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

0
8

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணத்தால் தொடர்ந்து தற்போது பல பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு வாரங்களாக மாலை வேளையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. நுவரெலியா வென்டிகோணர் பகுதியில் அருகில்வரும் வாகனம் தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு கூரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here