நீரில் மூழ்கி சிறுவன் பலி!

0
4

படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகங்கொட அளுத்வல பிரதேசத்தில் வசிக்கும் 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த சிறுவனின் தந்தை கடை நடத்தி வருவதால், அந்தக் கடையில் இருந்து சிறுவன் தனியாக வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால், வீட்டின் பின்புறமுள்ள விவசாய நிலத்திற்குத் தயார்படுத்தப்பட்ட தண்ணீர் நிரம்பிய வடிகாலில் சிறுவன் மூழ்கி கிடப்பதைக் கண்ட தந்தை ஆராச்சிகந்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here