பதில் தாக்குதல் இல்லாத வரையில் இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேலின் தாக்குதலுக்குத் தங்களின் பதில் தாக்குதல் வலுவானதும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
காசா மற்றும் லெபனானில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிராக இராணுவம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை இலக்கு வைத்து, ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51ஆம் பிரிவின் கீழ் தற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பதிவிட்டுள்ளார்.