நிதி மோசடி – 115 இந்தியர்கள் கைது!

0
7

இலங்கையில் இருந்து இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 115 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பல பகுதிகளில் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களின் போது குறித்த 115 பேரும் கைதாகினர்.

தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு – கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் கைதாகினர்.

கைதானவர்களிடம் இருந்து மடிக்கணினி, கையடக்கத் தொலைப்பேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here