வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரை சேகரித்து ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றினை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேங்காய் நீரின் ஒரு லீற்றரின் கொள்வனவு விலை 18 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் தென்னையில் காணப்படும் தேங்காய் நீரை விட இலங்கையில் தேங்காய் நீரின் செறிவு அதிகமாக இருப்பதாகவும் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.